Thamileelaarasiyalthurai.ca

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் – பெப் 04

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள்
2024.02.04
இன்று பெப் 04 இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரி நாளாக பிரகடனப்படுத்தி, பிரித்தானிய தமிழர்கள் ஒன்றிணைந்து சிறிலங்காவின் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம்(04) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானிய பேரரசிடமிருந்து சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அன்று முதல் இன்றுவரை எமது தாயகமான தமிழீழ தேசம், சிங்களப் பேரினவாதத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அன்று மறுக்கப்பட்ட நீதி, இன்று வரை மிகப்பெரிய இனஅழிப்பை தமிழினம் சந்தித்து நிற்கிறது. பிரித்தானியா உட்பட உலகின் பல நாடுகளில் தமிழர்கள் ஏதிலிகளாக வாழும் நிலையை உருவாக்கியது.

ஆகவே தமிழீழ மக்களுக்கு தன்னாட்சி ஒன்றே தீர்வு என்கின்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சி உரிமைப் போராட்டம் பிரித்தானியாவில் இன்று (04.02.2024 ) ஐரோப்பிய நேரம் காலை 11.00 மணிக்கு ஆரம்பமானபோராட்டமானது, சிங்கள பேரினவாத அரசின் தூதுவராலயம் முன்பு தொடக்கி மக்கள் கொட்டொலிகளுடன் பிரித்தானியப் பேரரசின் மன்னர் மாளிகை நோக்கி தமிழீழமே ஒரே தீர்வு என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழத் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன் ஆரம்பமானது.

அனைத்துலக ரீதியில் நடத்தப்படும் இப்போராட்டம் அனைத்துலக தொடர்பகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு , தமிழீழ அரசியல்துறை, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் ஆகிய தமிழ்தேசிய அமைப்புக்கள் இணைந்து நேர்த்தியான முறையில் இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இப்போராட்டத்தில் ஐரோப்பிய ரீதியில் அணிதிரண்ட தமிழர்களின் கொட்டொலிகளால் லண்டன் மாநகரம் அதிர்ந்தது. மாபெரும் மக்களலை லண்டன் மாநகரை அதிரச்செய்ததோடு, தமிழீழ தன்னாட்சியுரிமை உரிமையினை மீண்டும் உலகறியச் செய்துள்ளது.

இப்போராட்ட நிறைவில் அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின் பிரித்தானியா உறுப்பினர் உரை ஆங்கிலத்தில் இடம்பெற்றதை தொடர்ந்து யேர்மனி நாட்டினைச் சார்ந்த வேற்றின அரசியற் செயற்பாட்டாளர் ஒருவரின் உரை மற்றும் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.பொ.மகேஸ்வரன் அவர்களின் எழுச்சியுரையும் இடம்பெற்று இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டு தாயகம் நோக்கிய பயணத்திற்கு உறுதிமொழி எடுத்து இந்த பேரணி எழுச்சியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பிரித்தானியா


கனடா
பெப் 04 இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரி நாளாக பிரகடனப்படுத்தி கனடா தமிழர்களும், பல அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடா



தமிழீழ அரசியல்துறை

Add comment

Recent posts

தினசரி அறிவிப்புகள் : இணைய தளத்தில் இணைய தளத்தில்