நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் திரு வி.உருத்திரகுமாரன் அவர்கள் தமிழர் நினைவு அறக்கட்டளை அமைப்பிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
கனடாவில் அரச மட்டங்களில், பொது நிகழ்வுகளில் தமிழர் தேசியக்கொடியான தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவதற்கான அங்கீகாரத்தை குறுகிய காலத்திற்குள் பிரகடனம் செய்து முடித்த தமிழர் நினைவு அறக்கட்டளை அமைப்பிற்க்கும் அதனுடன் இணைந்து தேசியக் கொடி பிரகடனத்திற்காக உழைத்த அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அவர்கள் வாழ்த்தியும் பாராட்டியும் செய்தி அனுப்பியுள்ளார். இவ் வாழ்த்து செய்தியானது தொடர்ந்தும் இது போன்ற வேலைத்திட்டங்களில் செயல்பட செயற்பாட்டாளர்களுக்கு ஊக்கமளிப்பதோடு உற்சாகத்தையும் அளிப்பதாக பார்க்கப்படுகிறது.
Add comment