24.07,2023
எமது தாய் மண்ணில் தற்போது புதைகுழிகள் வெளிப்பட்ட வண்ணமுள்ளன இந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழியும் எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இறுதிப்போரில் சரணடைந்த எமது உறவினர்களின் புதைகுழியாக இருக்குமோ என சந்தேகம் வலுக்குறது. இந்த விடயங்கள் சர்வதேத்தின் பார்வைக்கு வெளித்தெரியாமல் இவற்றை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதனை உடனடியாக சர்வதேசத்தின் கவனத்திற்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் வெளிக்கொனரும் வகையில்
எதிர்வரும் 28.07.2023 அன்று காலை 9 மணி தொடக்கம் மதியம் 01 மணிவரை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு (கச்சேரிக்கு) முன்பாக மாபொரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் மகஜர் கையளிப்பு நிகழ்வும் நடைபெற உள்ளதால் வடக்கு கிழக்கு பிரேசங்களில் வாழும் அனைத்து உறவுகளும் வேறுபாடுகள் கடந்து மனிதநேய அடிப்படையில் ஒன்று கூடுமாறு பேரன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
ஏற்பாட்டுக்குழு
Add comment